பக்கம் எண் :

314சித்தர் பாடல்கள்

துய்யவெள்ளை ஆனதடி துலங்கும்வட்டத் தோரெழுத்து
மெய்யில்நடு நாளமடி விளங்கும்விந்து தான்இரங்கிப்
பைரஅளவு யோனியிலே பராபத்தி லேவிழுந்து
செய்யவட்ட மாகியடி - என் ஆத்தாளே
     சீமுல மாச்சுதடி.
111
  
நவ்வோடே மவ்வாகி நாலிதழின் மேற்படர்ந்து
உவ்வோடே சவ்வாகி உயர்வுன்னி யூடெழுந்து
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற காலாகி
இவ்வோ டுதித்தாண்டி - என் ஆத்தாளே
     இலங்குகின்ற திங்களடி.
112
  
கதிரங்கி யாகியடி கருணையினில் விந்திரங்கி
உதிரம் திரட்டியபடி ஓமென் றதனிலுன்னி
சதுரமது மண்ணாகிச் சதுர்முகனார் வீடாகி
மதுரம் பிறந்துதடி - என் ஆத்தாளே
     வையகனாய் வந்தாண்டி.
113
  
மெப்பாகச் சதுரமடி மெய்யாய் அதிற்பரந்து
ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில்முளைத்துச்
செப்பார் இளமுலையார் சீருடனே தானிருந்து
அப்பாலே மாலாகி - என் ஆத்தாளே
     ஆனந்த மானதடி.
114
  
உன்னியப்பு மேலேயடி ஓங்கிக் கதிர்பரந்து
மின்னியதில் தான்முளைத்து மேவுகின்ற சீயாகிப்
பன்னிவரு முக்கோணப் பதியதனி லேமுளைத்து
வன்னியென்னும் பேராகி - என் ஆத்தாளே
     மருவுகின்ற ருத்ரனடி.
115
  
வீரான வன்னியதன் மேல்நாளந் தான்முளைத்து
ஓராறு கோணமதாய் உள்ளேஓர் காலாகிப்
பேராகி நின்றுதடி பெருங்கிளையாங் கூட்டமதில்
மாறாமல் மாறியடி - என் ஆத்தாளே
     வையத் துதித்தாண்டி.
116