| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 459 |
Untitled Document
1041 - 43 அபிநவ காளமேகம்
அனந்த கிருஷ்ண அய்யங்காரின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு அனுப்பிய கவிதை. இவர் எழுதிய பாடல் ஒன்று கவிமணியின் கை, எ.பி.யில் குறிப்புகளுடன் உள்ளது. 1053 முத்துசாமிப் பிள்ளை திருவிதாங்கூர் அரசர், மூலம்திருநாளின் அறுபது ஆண்டுவிழாவில் பண்டித முத்துசாமிப் பிள்ளை, அரசரைப் பாராட்டிப் பாடியபாடல்களைக் கேட்ட கவிமணி, புகழ்ந்து பாடிய பாடல் (கை.எ.பி.)1055 தமிழரசி
ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி) கவிமணியின் நண்பரின் மகள் தமிழரசி என்னும் பெண்ணை வாழ்த்தி எழுதிய பாடல். 1056 பாஸ்கரன் ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி.) கவிமணி, தன் நண்பர் முத்துசாமி அய்யர் M.A.L.T. என்பவரின் பேரன் பாஸ்கரன் என்பவரை வாழ்த்தி அனுப்பிய பாடல்வரி. 1057 - 1058 பாரதி மண்டபம் 1057 ‘கல்கி’ 12-10-1947 ’குமரிமலர்’ ஏப்ரல் 1948 1058 ‘குமரி மலர்’ ஏப்ரல் 1948; இத்துடன் ஒரு கீர்த்தனையும் உண்டு. முந்திய தலைப்பு : பாரதி மண்டபத் திறப்பு.’ 1059 தெய்வ யோக சங்கம் நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் சாலையில் 60 கி.மீ. தொலைவில் உள்ள பாலராமபுரம் தமிழர்கள் நடத்திய தெய்வயோக சங்கத்துக்கு அனுப்பிய பாடல் (1949) (கி.பி.) பா.பே. வரி 1 சற்குருவாய் - குருவாக வரி 4 தளராதெந் - தழைத் தோங்கி 1060 - 1061 சகுந்தலை நிலையம் ம.மா.தொ.இ.பா. (சி.பி.) | |
|
|