பக்கம் எண் :

183

இரண்டாவது நூலில் மாதப் பாட்டும், வாரப் பாட்டும், ஆனந்தக் களிப்பும் அடங்கியுள்ளன. மாதப் பாட்டில் சித்திரை தொடங்கி 12 திங்களுக்கு 12 பாட்டும் வாரப் பாட்டில் ஆதிவாரம் தொடங்கி ஏழுநாட்களுக்கு 7 பாட்டும் ஆனந்தக் களிப்பில் 10 பாட்டும் ஆக 29 பாடல்கள் உள்ளன.

மௌனகுரு ருத்திரமூர்த்தி, வே (19-நூ)

ஊர்:மதுரை மாவட்டம் பழநி.
தந்தை: வேலாச்சாரி.
மறைவு:கி.பி. 1883.
நூல்:

அமணேஸ்வரக் கடவுள் பதிகம், பழநி சிவசுப்பிரமணியக்கடவுள் பேரில் சில கவித்திரட்டு; பழனியாண்டவர் மீது இசைப் பாடல்கள்.

மௌன சாமிகள், த (19-நூ)

ஊர்:திருப்பேரூர்.
நூல்: கொலைமறுத்தல் (1895), திருவருட்பா.

கொலைமறுத்தல் என்ற நூலுக்கு கிருத்துவங் கொண்ட குருட்டு மத கண்டனம் என்ற பெயரும் உண்டு. இந்து தெய்வங்களை இகழ்ந்து கூறியவர்களுக்கு உண்மை எடுத்தியம்புவதாகவும் உள்ளது.

வடக்குத் திருவீதிப் பிள்ளை (12-நூ)

வே.பெ: திராவிட வேதாந்த தேசிகர்.
ஊர்: திருவரங்கம்.

இவர் நம்பிள்ளையின் மாணவர். ஈடு முப்பத்தாறாயிரப்படி என்னும் வியாக்கியானத்தை எழுதியவர். அஷ்டாதச ரகசியத்தை அருளிச்செய்த பிள்ளை லோகாசிரியருக்கும் ஆசாரிய ஹிருதயம் அருளிச் செய்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கும் தந்தையார் ஆவர்.

நூல்:ஈடு முப்பத்தாறாயிரப்படி.