வடிவேலு முதலியார், டி (20-நூ) | வாழ்விடம்: | சென்னை. | | பிறப்பு: | 1883. | | நூல்: | ‘ஞானியார் சாமிகள் வாழ்க்கை வரலாறு’ (1948). |
வடுகநாதக் கவிராயர் (18-நூ) | வே.பெ: | வள்ளல் வடுகநாதக் கவிராயர். | | ஊர்: | மல்லையூர். | | தந்தை: | மதுரகவிராசர். |
இவர் புலவராகவும் புரவலராகவும் விளங்கினார். பஞ்ச காலத்தில் மக்களுக்கும் புலவர்களுக்கும் ஏற்பட்ட உணவுப்பசியை நீக்கியமையால் வள்ளல் என்று அழைக்கப் பெற்றார். இவருடைய உணவுக் கொடையையும் புலமைச் சிறப்பையும் கவிஞர்கள் வியந்து போற்றியுள்ளனர். இவர் கவிபாடி யானைப் பரிசில் பெற்றவர். வடுகநாத தேசிகர் - 1 (17-நூ) இவர் இலக்கண விளக்கம் வைத்தியநாத நாவலரின் 4-வது மகனாவர். பிற்காலத்தில் சீர்காழியில் தங்கியிருந்ததால் சீர்காழி வடுகநாத தேசிகர் என்று அழைக்கப் பெற்றார். | நூல்: | திருமுல்லை வாயில் புராணம். |
இந்நூல் 415 பாடல்களை உடையது. வடுகநாத தேசிகர் - 2 ( ) | நூல்: | புள்ளிருக்கு வேளூர்ப் புராணம். |
|