வரதப்ப முதலியார் (19-நூ) | வே.பெ: | தொல்காப்பியம் வரதப்ப முதலியார். | | நூல்: | இராமானுச கவிராயர் இயற்றிய நன்னூல் விருத்தியுரைக்கு சாற்றுக் கவி. |
வரத பண்டிதர் (18-நூ) | வே.பெ. | வரதராஜ பண்டிதர். | | ஊர்: | ஈழநாட்டில் சுன்னாகம். | | தந்தை: | அரங்கநாத ஐயர். |
இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், வேதாந்த சித்தாந்த சாத்திரங்களிலும், மருத்துவம், காலக் கணிதம் முதலிய துறைகளிலும் சிறந்த அறிவுடையவராக விளங்கினார். இவர் வாக்குப் பலிதமுடைய கவிஞராக விளங்கியமையால் வரகவி, என அழைக்கப் பெற்றார். | நூல் : | சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம். பிள்ளை விடுதூது, பிள்ளையார் கதை, அமுதாசரம் (மருத்துவ நூல்). |
இவர் பாடிய சிவராத்திரி புராணம் ரெங்கநாதர் என்பவர் பாடிய சிவராத்திரிப் புராணத்தினின்றும் வேறானது. வரதராச அடிகள் (19-நூ) இவர் இராமலிங்க அடிகளின் நெறியைப் பின்பற்றி வடலூரில் வாழ்ந்திருந்தவர்.
|