பக்கம் எண் :

203

கற்றார். கும்பகோணம் மகாமகம் விழாவிற்கு வந்தபோது பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றுப் புராண நூல்களை ஓதியுணர்ந்தார். இக்காலையில் திரிசிரபுரம் கோவிந்தப் பிள்ளை என்ற அறிஞரையடுத்துக் கம்பராமாயணத்தில் சில பகுதிகளைக் கற்றார். இயற்றமிழாசிரியர் விசாகப் பெருமாள் ஐயரிடம் நன்னூல் காண்டிகை உரையினையும் விருத்தி உரையினையும் கற்றார். மற்றும் பெரும் புலவர் சபாபதி முதலியார், அவருடைய மாணவர் புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் ஆகியோரிடமும் சில நூல்களைப் பாடங் கேட்டு ஐயங்களை நீக்கிக் கொண்டார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரிடம் சைவ நூல்களையும் சித்தாந்த நூல்களையும் பாடங் கேட்டார். பல அறிஞர்களிடம் கல்வி கற்ற இவர் பல மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டார். இவரிடம் கல்வி கற்றவர்களில் வீர.லெ.சின்னைய செட்டியார், இராமசாமிச் செட்டியார், காரைக்குடிராய. சொ. சொக்கலிங்கச் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

வன்தொண்டர் கல்வி கற்றதைப் போலவே தீவிர கடவுள் பக்தி உடையவராகத் திகழ்ந்தார். கடுமையான நாட்கடன்களை மேற்கொண்டதோடு தேவாரத்திரட்டு, திருமுருகாற்றுப்படை மற்றும் திருமுறை நூல்களை ஒரு நாளில் பல தடவைகள் சொல்லிச் சொல்லி இன்புறுவார்.

இவர் தம் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பேரன்பு கொண்டிருந்ததோடு, புராணம் பாடி அரங்கேற்றுவதில் வருவாய் ஏற்பட வழி செய்தார். இதனை நினைத்து பிள்ளை அவர்கள் இவர் மீது வெண்பா வொன்று பாடிச் சிறப்பித்துள்ளார்.

இவர் நூல்கள் ஏதும் இயற்றவில்லை யெனினும் பல்வேறு வகைகளில் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். தம் ஆசிரியர் பிள்ளையவர்களைக் கொண்டு சேக்கிழார் மீது பிள்ளைத் தமிழ் பாடச் செய்தார். அறுபத்து மூவர் குரு பூசை மான்மியம் என்னும் நூலையும் இயற்றச் செய்தார். சிங்கைச்சிலேடை