பக்கம் எண் :

205

வன்னியப்ப பிள்ளை, பா.கி (20-நூ)

ஊர்:பாண்டிய நாட்டில் பாட்டை.
தந்தை:கிருட்டிணப் பிள்ளை; வேளாளர்.

இவர் இளமையிலேயே கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றவர்.

நூல் :

மகப்பேற்றுப் பதிகம், திருமலைத் திருக்குவளைமாலை, உலகாம்பிகை அடைக்கலமாலை, சமயமதி, திருமலைக்குமரன் அலங்காரம்.

வாகீச முனிவர் ( )

இவர் சந்தான குரவர்களில் ஒருவர். இவருடைய ஆசிரியர் பரமானந்த முனிவர். இவர் திருமறைக் காட்டிற்கு அண்மையில் உள்ள கோடலம்பாகை என்னும் ஊரில் தங்கியிருந்தார். இங்குதான் வாகீச முனிவர் ஆசிரியரின் அருளைப் பெற்றார்.

நூல் :ஞானாமிர்தம்.

இந்நூல் 68 அகவற் பாக்களைக் கொண்டது. இந்நூலால் ஆசிரியரின் கல்விச் சிறப்பை உணரலாம்.

வாகு சிங்கன் ( )

தந்தை:துரைரனசிங்கன்.
நூல்:பழநி நொண்டி நாடகம்.

வாசுதேவக் கவிஞர் (19-நூ)

ஊர்:கொங்குநாடு.
நூல்:பழமொழி மாலை (1875).

இந்நூல் உரையுடன் கூடியது. பழமொழிகளின் ஏது காட்டிய 30 செய்யுட்களைக் கொண்டது; கூனம்பாடி இராசலிங்க மாணிக்கவாசக சாமிகள் மீது பாடப் பெற்றது. திருக்குறள்