பக்கம் எண் :

310திருஞானசம்பந்தநாயனார் புராணம்

ரிணையடி யென்மனத் துள்ளவே" "ஆரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே" முதலியவற்றின் கருத்து.
     பத்தருடன் இனிதமரும் பண்புகூடத் தாள் ஏத்திப் பயிலும் - அடியாரோடினிதிருக்கும் பேறு சிவனருளாற் பெறப்படுவது. கூட - அதனைக் கூடுதற் பொருட்டு. கூட - கூடியதனால் என்றலுமொன்று. அடுத்துத் திருநாவுக்கரசரது கூட்டம் நிகழவுள்ளமை திருவுள்ளக் குறிப்பு.
267
     2166. (வி-ரை.) பந்தணை மெல்விரலாள் - பெரியநாயகி யம்மையார். "பந்துசேர் விரலாள் பங்க" (திருவா). (பந்தாடுதலை மகளிர்களிடை நின்றும் ஆடவர் இந்நாளிற் பெரிதும் கைக்கொண்டு தந்நிலை நீங்கினர்.) இது மகளிரின் பொது வியல்பு குறித்ததன்றி உமையம்மையார் பந்தாடுகின்றார் என்பதன்று. "மனைகடொறும் இறைவனது தன்மை பாடிக், கருந்தடங்கண் ணார்கழல் பந் த ம்மானைப் பாட்டயருங் கழுமலமே" என்ற திருவாக்கு இதன் தன்மையை இனிது விளக்குகின்றது. புவனங்களாகிய அம்மை தன்னிடம் நின்று வெளியே விட்டு அவை மீண்டும் தன்பால் அணையும்படி நிற்கின்றார் என்ற உட்குறிப்பும் காண்க. அணை என்ற குறிப்புமது.
     திறம் கேட்டு - திறம் - நற்செய்தி. "பந்தணை.....ஞானசம்பந்தர்" என்றபகுதி; இதுவே அரசுகள் கேட்ட திறமாவதென்பார், ஞானசம்பந்தர் என்றதனோடு உடம்பொடு புணர்த்தி ஓதினார். 1442 - 1443 பார்க்க. ஆண்டும் "அமுது செய்த பிள்ளையார் திருவார்த்தை" என்றும், "பெருந்தகை சீர்" என்றும் கூறியவை காண்க. கேட்டவர் ஆண்ட அரசுகளாதலின் ஆண்டு அதனை விரித்து இங்குச் சுருக்கிக் கூறிய நயமும் கண்டுகொள்க.
     வரம்பில் ஞானத்தமுது - வரம்பில் ஞானம் - எல்லாவற்றையும் அடக்கித் தான் மேம்பட்டு நிற்றலின் வரம்பில் ஞானம் எனப்பட்டது. ஞானத்தைக் குழைத்த அமுது.
     திறம் - பெருமை - வன்மை - முதலிய எல்லாம். "திறங்கொண்ட வடியார்" (தேவா).
     இறைஞ்சுதற்காக அணைந்தனர் - "கேட்டலுமே யதிசயமாங் காதல்கூர வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்குமனத்தெழுந்த விருப்புவாய்ப்ப" (1443). இறைஞ்சுதற் பொருட்டே அரசுகள் அணைந்தனர் என்க.
     நாவுக்கரையர் ஆதலின் செந்தமிழின் வரும் ஞானத்தமுதத்தை விரும்பி வந்தனர் என்றதும் குறிப்பு.
268
அரசும் பிள்ளையாரும் சந்திப்பு - I
 
2167.வாக்கின் பெருவிறன் மன்னர் வந்தணைந் தா"ரெனக் கேட்டுப்
 பூக்கமழ் வாசத் தடஞ்சூழ் புகலிப் பெருந்தகை யாரும்
"ஆக்கிய நல்வினைப் பேறெ"ன் றன்பர் குழாத்தொடு மெய்தி
 யேற்கும்பெருவிருப்போடுமெதிர்கொளவெய்தும்பொழுதில்,
269
2168.சிந்தை யிடையறா வன்புந், திருமேனி தன்னி லசைவுங்,
கந்தை மிகையாங் கருத்துங், கையுழ வாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும், வடிவிற் பொலிதிரு நீறும்
அந்தமி லாத்திரு வேடத் தரசு மெதிர்வந் தணைய,
270