பக்கம் எண் :

322திருஞானசம்பந்தநாயனார் புராணம்

திருவழிமொழித் திரு இராகம்
திருச்சிற்றம்பலம் பண் - சாதாரி
சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.
(1)
ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகண் மொழிதகையவே.
திருச்சிற்றம்பலம்
     பதிகக் குறிப்பு :- சீகாழிப் பன்னிரு பெயர்களும் வந்த வரலாற்றினை அவ்வழியே மொழிதலினால் வழிமொழி (த் திருப்பதிகம்) எனப் பெயர் பெற்றது; முடுகிய சந்தமுடைமையின் இராகம் எனப்பட்டது; பாட்டின் ஒவ்வோரடியினும் எல்லாச் சீர்களும் அப்பாட்டில் கூறப்படும் அப்பெயர் பற்றிய வழியெதுகையாக அமைந்த செய்யுள் யாப்பமைதியுடைமையும் வழிமொழி என்றதனாற் குறிக்கப்பெறும். பிரமபுரம் என்ற முதற் பெயர்ப்பாட்டு, சுரருலகு நரர்கள்பயில் என்றும், கழுமலம் என்ற பன்னிரண்டாம் பெயர்ப் பாட்டு அவ்வாறே ஒழுகலரி தழிகலியி லுழியுலகு என்றும் இவ்வாறு வருதல் காண்க. "வழிமொழிகள்" (12) என்று இறுதிப் பாட்டினுள் பதிகப் பெயரினைப் பொறித்தருளியமையும் காண்க. "பல்பெயர்ப்பத்து" என்ற பதிகத்தினுமிவ்வாறே காண்க.
     பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) பிரமபுரமே பரமனிடமாம் என்று முடிக்க. முன்னடிகளில் இறைவரது தன்மையும் பின்னடிகளில் அத்தலத்திற்கு அப்பெயர் போந்த வரலாறும் கூறப்பட்டன. இவ்வாறே ஏனைப் பாட்டுக்களினும் கண்டு கொள்க; சுரருலரும் - நரர்கள்பயில் தரணிதலமும் - என்க. முரண் அழிய - முரணினால் அழிதலினால்; மதில் அரணம் என்க. சாவிசை - சரத்தின் விசை; சரத்தின் இசை என்றும் உரைக்க நின்றது; சரம் - அம்பு; இசை - புகழ்; விசை - வன்மை; நிரைநிறைகொள் சுருதி - எல்லாச் சுரங்களும் வரிசைபெற அமைந்த; சுருதி சிரவுரை - வேதசிரமாகிய உபநிடதவுரைகள்; பிரமன்சிரவுரையினால் சரணவிணை பரவ - என்க. பிரமன் பூசித்தமையாற் பிரமபுரம் எனப்பட்டதென்பது;-(2) தாணு - நிலைபெற்றவர்; தம்பம்போலத் தாங்குபவர்; கோணும் - வளைவாகிய; நீள் நயனி - நீண்ட கண்ணையுடைய அம்மை; கோணில் - குற்றமற்ற; பிடி - பிடி போன்றவர்; பிடியும் கரியுமாகப் பிரணவத்தினின் றுகரி முகவரைத் தோற்றுவித்த; வரலாறுங் குறிப்பு; அமரர்கோன் - இந்திரன்; வேணு - மூங்கில்; வேணு - என்பான் ஓரிந்திரன்; காணிறிவி - சூரபது மனுக்கு அஞ்சிய இந்திரன் வந்து மூங்கிலில் மறைந்துறைந்து பூசித்த வரலாற்றினாற் போந்த பெயர் வேணுபுரம் என்றது;- (3) பகல்ஒளி செய் - ஞாயிறு போலும் ஒளிவீசும்; நகமணி - நாகரத்தினம்; முகைமலர் - அலரும் தாமரை; நிகழ் - உவமவுருபு; போல உள்ள; சரணஅகவு - திருவடிகளைப் பாடுகின்ற; அகலம் - பெருமை; எல்லா ஞானங்களையும் தன்னுள் அடக்குதல்; உரை செய்முகம் - சிவனைம்முகங்களுள் ஈசான முகம்; பகை - தேவர்க்குப் பகையாகிய சூர்முதல்; அறுமுகவிறை - முருகக் கடவுள்; அருள - கொடுக்கும்படி. இமையோர்புக - நிகழ் - தேவர்கள் புகலடைந்தமை