பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்329

யொருதனு விருகால் வளைய வாங்கி
15   முப்புரத் தோடு நானில மஞ்சக்,
கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை;
யைம்புல னாலா மந்தக் கரண,
முக்குண மிருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; யொருங்கிய மனத்தோ,
20   டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து
நான்மறை யோதி யைவகை வேள்வி,
யமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்,
பிரமபுரம் பேணினை;
25   யறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை
இகலி யமைந்துணர் புகலி யமர்ந்தனை;
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை;
பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த,
தோணிபுரத் துறைந்தனை; தொலையா விருநிதி
30வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை;
வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை;
யொருமலை யெடுத்தத விருதிற லரக்கன்,
விறல்கெடுத் தருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்,
35   பண்பொடு நின்றனை; சண்பை யமர்ந்தனை;
ஐயுறு மமணரு மறுவகைத் தேரரு,
மூழியு முணராக் காழி யமர்ந்தனை;
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை;
யாறு பதமு மைந்தமர் கல்வியும்
40மறைமுத னான்கும்,
மூன்று காலமுந் தோன்ற நின்றனை;
யிருமையி னொருமையு மொருமையின் பெருமையு,
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,
45   கழுமல முதுபதிக் கவுணிய, னறியு
மனைய தன்மையை; வாதலி னின்னை,
நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.
திருச்சிற்றம்பலம்
     பதிகக் குறிப்பு :- இது இணைக்குறள் ஆசிரியப்பா ஆகிய ஒரே பாட்டு : ஆயினும் மரபுபற்றிப் பதிகமெனப்படும்; பிள்ளையாரது பதிகத்தில் 8 - 9 - 10 - 11 பாட்டுக்களின் பெரும்பான்மை நியதியாக வைக்கப்பெறும் பொருள்களாகிய இராவணனருள்பெற்றமை, அயன்மாலருள் பெற்றமை, சமணபுத்தர்நிலை, பதிகப் பயன் என்ற இவை 12 பாட்டுக்கள் கொள்ளும் தலப்பெயர்ப் பதிகங்களுக்கேற்ப 47 அடிப்பெருமை கொண்ட இப்பாட்டிலும் அமைதலுங் காண்க.