|
நோன்பியற்றும் சமணர். பெருங்கோயில் - தோணி.-(11) விண்ணவரடி தொழு - தேவர்கள் தாங்கி நிற்க என்ற குறிப்பு. இடராயின........தவநெறியே - 2 - 3 பார்க்க. |
திருச்சண்பை நகர் |
திருச்சிற்றம்பலம் திருவிராகம் | பண் - சாதாரி |
|
எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானென விறைஞ்சி யிமையோர் |
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனா |
லந்தியமர் சந்திபல வர்ச்சனைகள் செய்யவமர் கின்றவழகன் |
சந்தமலி குந்தனநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே. |
(1) |
வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமருமூர் |
சாரின்முர றெண்கடல் விசும்புற முழங்கொலிகொள் சண்பைநகர்மேற் |
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய் |
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வார்சிவ லோகநெறியே. |
(11) |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- "மேன்மை நடையின் முடுகும் இராகம்" (2175) என்று ஆசிரியர் அறிவித்தபடி முடுகிய சந்தத்திசையிற் செல்ல அமைந்தது இத்திருப்பதிகம். அழகராகிய பெருமான் மாதினொடு மிருந்தபதி சண்பைநகரே என்பது குறிப்பு. |
பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) "எந்தமது......பெருமான்" என - இது விண்ணோர்துதிப்பது. சூரனுக்கஞ்சிய இந்திரன் புகலடைந்த குறிப்புமாம் - குந்தளம் - கூந்தல்; - (2) விரிதுத்தி - விரிகின்ற படம்; - (3) போழும்; பிளந்தது போன்ற; மாழை - மாவடு; "மாவடு வகிரன்ன கண்ணிபங்கர்" (திருவா); தாழை முகிழ் - தாழையின் மொட்டு; வேழமிகு தந்தம் என - யானைக் கொம்புபோல; "முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பினன்ன - (நற்றி - 19) - (4) மட்டு - மணம்; தேன் என்றலுமாம்; மதிதட்டுபொழில் - மதியைத் தடவும்படி உயர்ந்தசோலை; சட்டகலை - ஆறங்கம்; எட்டுமரு எட்டும் - 64 கலைஞானங்கள்; (6) அணவு - அணுகிவந்த; நீலம் - நீலோற்பல மலர்; - (7) விண்பொய்....ஒழியினும் - வானம் பிழைத்தல்; "விண்ணின்று பொய்ப்பின்" (குறள்) மண்பொய் - மண்ணுலகின் நல்லொழுக்கத்தவறு; இவை பருவ மழை விழாமைக்கும் விளைவுக்குறைவுக்கும் காரணமா மென்றது. வண்மை வழுவார் - உலகம் வறண்ட காலத்தும் காழிப்பதியவர் வள்ளற்றன்மை குறையார்; "ஒருநாளுங் கரவா வண்கைக் கற்றவர் (குறிஞ்சி - காழி - 1) - அதுவே அடியார் தன்மை என்க. அவ்வாறு வழுவாதிருத்தல் அடியாராந் தன்மையால் வருவது என்றபடி; பின்னர்ப் பிள்ளையார் இறைவன்பாற் பெற்ற உலவாக்கிழிகொண்டு திருக்கழுமலத்து வேதவேதியரனைவரும் வேள்வி செய்யவு மிகுந்திருக்கும் வரலாற்றை இங்கு நினைவுகூர்க.-(8) மறுக்கம் - அச்சம்; உரம் - மார்பு; ஏழ் - ஏழும்; - (9) பறவை - அன்னம்; மாலு மலார்னும் - முறையே கேழலுரு - நீள்பறவையும் ஆக என்று நிரனிறை; வரதன் - தீயுருவாகிய அறியப்படாத நிலையினின்றும் பின் வெளிப்பட்டு வரமும் தந்தவன் என்பது குறிப்பு :- (10) போதியர் - போதியடியில் அமர்ந்தவனது சமயத்தினர் (புத்தர்); பிண்டியர் - அசோகினடியில் அமர்ந்த அருகனது சமயத்தினர் (சமணர்). போது வழுவாதவகை - காலந்தவறாது. நாட்காலையில்; திரை - மணி - எறி என்க. |