பக்கம் எண் :

மனோன்மணீயம்
210

83. போதம் - அறிவு.

87. துவக்கு இந்திரியம் - தொட்டறியும் உணர்வு, பரிசம்.

89. சேய்த்து - தூரத்திலுள்ளது, சேய்மை - பகுதி.

95. வடக்குநோக்கி - திசைகாட்டும் யந்திரம். இதில் முள் எப்பொழுதும் வடபக்கத்தையே நோக்கி நிற்கும் (Mariner's compass).

104. ஏய்ப்ப - போல.

115. அனுமான ஆதியால் - அனுமானம் முதலிய அளவுகளால்.

121. சீதம் - குளிர்ச்சி.

133. வெஞ்சரம் - கொடிய அம்பு.

134. நிற்கலை - நிற்கவில்லை.

[இக்களத்தில் சந்தியாவருணனையும் மனோன்மணியின் சோக நிலையும் பத்தியின் சுபாவமும் உபயார்த்தமுடைய சிவகாமிசரிதமும் சொல்லப்பட்டமை காண்க.]

மூன்றாம் அங்கம்

நான்காம் களம்.

1. மயக்கம் - கலக்கம் ;மயங்கு பகுதி.

2. வேதாந்தம் - வேத + அந்தம் - மறை முடிவு.

3. இமையாது - இமை யென்னும் வினையடியாகப் பிறந்த எதிர்மறை வினையெச்சம்.

4. பரிதபித்திருந்தீர் - வருந்தியிருந்தீர்;பரிதாபம், பெயர்.

13. விரூபம் - வி + ரூபம் - ரூபமற்றது. அவலட்சண வடிவம்.

15. அல் - இருள்.

16. பேழ்வாய் - பெரிய வாய்.

21. இசித்துக் கறிக்க - இழுத்துக் கடிக்க.

28. பஞ்சா சத்கோடி - ஐம்பது கோடி.

36. அலகிலை - அளவில்லாதது.

38. உந்தியந் தடாகம் - கொப்பூழாகிய குளம். முளரி - தாமரை, முள்ளோடு கூடிய தண்டையுடையது.

41. நான்முகச் சிலந்தி - நான்கு முகங்களையுடைய பிரமனாகிய சிலந்திப்பூச்சி. நாற்றிய - தொங்கவிட்ட, நால் தன்வினைப்பகுதி. இதனுடன் று என்ற பிறவினை விகுதி சேர்ந்து நாற்று என்ற பிறவினைப் பகுதியாகும்.

45. பேய்த்தேர் - கானல் நீர்.

49. மகோததி - மகா + உத்தி - (குணசந்தி) பெருங்கடல்.

50. புற்புதம் - நீர்க்குமிழ்.

52. தாங்குநர் - தாங்குபவர்.

54. இந்திரஜாலம் இவ் எந்திர விசேடம் - [மாயாகாரியமாகிய பிரபஞ்சம்]

56. திரிகை - திரிக்கும் இயந்திரம்.

64. [ஆர்க்கும் - வருந்தி இரைகின்ற.]

66. மீக்கொளும் - மேலாகும்.

71. பிரத்தியக் பிரபோ தோதயம் - உன் முகமான மெய்ஞ்ஞானத் தோற்றம்.

73. அகண்ட - எல்லையற்ற, சித் - அறிவு.

80. [சுதமாம் - சுவத சித்தமாம் - தானே பலிக்கின்ற]

88. மோனம் - ஞானவரம்பு.

104. சினகரம் - கோவில்.

116. அகம் உடைந்தும் - மனம் வருந்தியும்.

123. விடும்பரிசு - விடுந்தன்மை.

138. சங்கேதம் - குறியீடு.

144. கரதலாமலகம் - அங்கை நெல்லிக்கனி, நெல்லிக்கனியின் உட்புறம்போன்ற தன்மையே அதன் வெளிப்புறத்தும் காணப்பெறும். இதன் உண்மையைக் கையிற்கொண்