பக்கம் எண் :

மனோன்மணீயம்
211

டே தெளியலாம் என்றபடி, கரதல + ஆமலகம்; தீர்க்கசந்தி.

155. விண்டிடா வண்ணம் லீக்கியபாசம் - பிரிந்திராவிதம் கட்டிய கயிறு.

156. ஆகருஷணம் - இழுத்து நிற்கும் சக்தி.

160. குயிற்றிய - செய்த, குயிற்று பகுதி.

168. அக்கரம் பயில்வது - அட்சரம் பழகல், எழுதப்படிப்பது.

176. உள்ளுவர் - நினைப்பர், உள் - பகுதி.

179-182. [பாரிஜாதம் முல்லை முதலிய பூக்கள் வெண்மை நிறமும் சுகந்தமும் உடையனவாயிருப்பதற்கு அவை இராக்காலம் அலர்தலே காரணம் என்பது ஜீவ சாத்திரிகளின் கொள்கை.]

184. உசிதம் - மேன்மை. நிசி - இரவு.

196. உறுகண் - துன்பம், இடுக்கண். ஏது - காரணம்.

208. அல்லல் - துன்பம்.

222. சாத்தியம் - முடியக்கூடியது.

227. [பந்தம் - சம்பந்தம்.]

236. எய்ப்பினில் வைப்பு - இளைத்தகாலத்து உதவும் பொருள்.

239. சமுசயம் - ஐயம்.

250. அரற்றி - வாய்விட்டுச் சொல்லி, அழுது.

259. முகமன் - நயவுரை, முகத்துதி.

277. [நீர் பிரபஞ்சத்தை அருள்வடிவாகப் பார்க்கும் பார்வையும் முடிந்த நிலமன்று. ஆயினும் உமக்குப் பந்த நிவிர்த்தி சமீபமாய்விட்டது. என்பது இவ்வரியின் குறிப்புப் பொருள்.]

281. சமயிகள் - சமயத்தைச் சார்ந்தவர்கள், மதத்தோர்.

கலித்துறை:-ஆபதம் - ஆபத்து, கற்படை - சுருங்கை. மாற்றம் - சொல்.

[முடிவில் வரும் கலித்துறை சுந்தரர் சமைத்த சுரங்கத்தைத் தத்துவோபதேசமாக உருவகப் படுத்தி அனுபூதியாலன்றி உபதேசார்த்தம் வெளிப்படாதென்று வற்புறுத்துகிறது.]

--------

நான்காம் அங்கம்

முதற் களம்

8. மடு - தடாகம், குளம்.

11. ஒன்றிய - பொருந்திய.

20. கடம்பாடு - கடன்படுதல், கடமை.

31-32. "கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து" - குறள் அதி. 49 செ. 10 என்ற குறட்கருத்து.

33. சம்பவம் - காரணம், சங்கதி - வரலாறு.

46. இதக்கேடு - நன்மைக்குக் கெடுதி.

50. பாற்றினம் - பருந்துக் கூட்டங்கள்:

51. பணைத்து - பருத்து.

61. கலினம் - கடிவாளம்.

66. மும்மதம் - கன்னமதம், கபோலமதம், கோசமதம் என்ற மூன்று மதம்.

68. கறுவி - கோபித்து.

69. வெந்நிட்டு - முதுகுகாட்டி, புறங்கொடுத்து.

[இவ்வரி உக்கிர குமார பாண்டியன் இந்திரன் முடிமேல் வளை