பக்கம் எண் :

மனோன்மணீயம்
220

தும்பை, மங்கை, மடந்தை, தெரிவை, பேரிளம்பெண் என்பன. இங்கு அரிவை பொதுவாய்ப் பெண்களைக் குறிப்பது.

12. மணிக்கே - மனோன்மணிக்கே.

22. காட்டல் - பாவனை செய்தல்.

29. அவ்வுழி - அந்த இடம், உழி - ஏழனுருபு, இங்கு இடத்தைக் குறித்தது.

38. [பிழைத்தல் - உய்தல், குற்றப்படுதல்]

40. வெந்தது வீடு - குடி கெட்டது.

44. நமர்காள் - நம்மவர்களே!

45. கொலு - அரசு வீற்றிருக்குமிடம்.

52. [பாடு - உழைப்பு, நாராயணன் பாடு என்பதற்குக் கேடு எனப் பொருட்படுத்தி விடை கூறுகிறான்.]

65. கோலாகலம் - ஆடம்பரம்.

77. எள்ளரும் - இகழ்தலில்லாத.

80. மானும் - ஒக்கும், போலும்.

83. படும் - பொருந்தும்.

93. [பெரியள் - வயதிற் பெரியள், பக்குவவதி.]

100. கொற்றவை - அரச சபை.

102. இறும்பூது - வியப்பு.

104. வன்திறல் - வலிய திறமை, மிக்க வலிமை, திறல் - வெற்றியுமாம்.

105. ஆரா - நீங்கா.

108. ஆள்வினை - முயற்சி.

112. தற்புகழ் - தன்னைப்புகழ்தல்.

124. பலிதம் - பலனைத் தருவது.

131. அயிர்ப்புறார் - ஐயமடையார்.

137. தாபதம் - தவப்பள்ளி.

142. கவ்விய - பற்றிய.

144. தீச்செறி - நெருப்பிற் பொருந்தும்.

148. தெருள் - அறிவு. சூழ்ச்சி - ஆலோசனை.

154. புலையன் - நீசத்தன்மையன்,

167. தினமணி - சூரியன்.

கொச்சகக்கலிப்பா.

1. கரி - கஜேந்திரன் என்னும் யானை, ஆர் துயர அளக்கர் - நிறைந்த துன்பக் கடல்.

2. தெரிவை - துரோபதை.

3. மார்க்கண்டன் - மிரு கண்டு முனிவர் மகன். தத்திதாந்தநாமம். வெறி கழுமி - கலக்கம் பொருந்தி, பொறி யழியும் - ஐம்பொறி யுணர்வும் அழியப்பெற்ற.

[கொச்சகக்கலிப்பா மூன்றும்பொதுவான பிராத்தனையாகவும், மனோன்மணியின் கனாக்காட்சிக்கும் காமநிலைக்கும் ஏற்றதாகவும் நிற்பது காண்க. ]

177. ஏற்புடை - தக்க.

180. வாங்குதி - வாங்குவாய் பெறுவாய்.

184. கண் அளவில்லாது நீர் பெருகி உள்ளே வறட்சியடைந்தது என்பது இவ்வரிப்பொருள்.

185. நாட்டம் - கண்.

193. [மூன்றாம் அங்கம் நான்காம் களத்துள் நடந்த சம்பாஷணைப்படி கருணாவிலாசம் கண்டேன் என்பது பொருள்.]

202. வஞ்சியான் வஞ்சியான் - வஞ்சி மன்னனாகிய சேரன் வஞ்சிக்க மாட்டான்.

211. பண்ணியல் - பண் பொருந்திய.

213. அருமருந்தை - அரியதேவாமிர்தம் போல்வாளாகிய மனோன்மணியை.

229-230. நாளைக்குப் போர் செய்ய விரும்புவாயானால் போரின் வலிமையைப் பார்ப்போம்.

225. [தாரா - தாராக, மணமாலையாகத் தன் கை யிரண்டும் சூட்டி.]

229. கண் வளர்தல் - நித்திரை செய்தல்.

233. [திடுக்கிட்டு விழித்ததைப் பிரிவிற்கஞ்சி நடுங்கினதாகக் கருதி