பக்கம் எண் :


445


    5. பாம்புமிழ் மணி: குறிஞ்சிப்.221, அகநா. 72:14-5.

    3-5. காந்தளுக்குப் பாம்பு உவமை: குறுந். 185:5-7; கலி. 45:2-3; அகநா.108:12-5; கார். 11. திணைமாலை 107; திணைமொழி. 3,29; திருச்சிற். 233, 324.

    வண்டுக்கு நீலமணி: "சில தும்பி ... ... ... நீலம் புரைவன பலகாணாய் (கம்ப.வனம்புகு.12.)

    காந்தளுக்குப் பாம்பும் தும்பிக்கு மணியும்: "திருமணியுமிழ்ந்த நாகங் காந்தட், கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி, நன்னிற மருளு மருவிடர்" (அகநா. 138:17-19.) 6. முந்தூழ் வேலி: குறுந். 18:1, ஒப்பு.

(239)
  
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "நான் அவர் மலையை நோக்கி ஆற்றினேன்; மாலைக் காலத்தில் அது மறைகின்றது; ஆதலின்ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.)
 240.   
பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் 
    
கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர் 
    
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞல 
    
வாடை வந்ததன் றலையு நோய்பொரக் 
5
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் 
    
கடலாழ் கலத்திற் றோன்றி 
    
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.  

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கொல்லன் அழிசி (பி-ம். கொல்லனழுசி.)

    (பி-ம்.) 2. ‘பணைமலர்’; 3. ‘வெருகுப்பல்’, ‘கஞலி’; 4. ‘நோயோர்க்’; 6. ‘றோற்றி’.

    (ப-ரை.) தோழி-, பனி புதல் இவர்ந்த - குளிர்ச்சியை உடைய புதலின்கட் படர்ந்த, பசு கொடி அவரை - பசிய கொடியாகிய அவரையினது, கிளிவாய் ஒப்பின் ஒளி விடு பல்மலர் - கிளி மூக்கை ஒப்பாக உடைய ஒளியை வெளிப்படுத்தும் பல மலர்கள், வெருகு பல் உருவின் முல்லையொடு கஞல - காட்டுப் பூனையின் பல்லைப் போன்ற உருவத்தை உடைய முல்லை மலர்களோடு நெருங்கும்படி, வாடைவந்ததன் தலையும் - வாடை வீசுங்காலம் வந்ததற்கு மேலும்,