பக்கம் எண் :


447


     6-7. தலைவனது மலையைக் கண்டு தலைவி உவத்தல்: "சேணெடுங் குன்றங் காணிய நீயே" (நற்.222:10); "அன்னாய் வாழி வேண் டன்னைநம் படப்பைப், புலவுச்சேர் துறுக லேறி யவர்நாட்டுப், பூக்கெழு குன்ற நோக்கி நின்று, மணிபுரை வயங்கிழை நிலைபெறத், தணிதற்கு முரித்தவ ளுற்ற நோயே "(ஐங்.210); "உள்ளா ராயினு முளனே யவர்நாட்டு... கடுந்திற லணங்கி னெடும்பெருங் குன்றத்துப், பாடின் னருவி சூடி, வான்றோய் சிமையந் தோன்ற லானே" (அகநா.378:19-24); "தோழியென், நெஞ்சிற் பிரிந்ததூஉ மிலரேதம், குன்ற நோக்கங் கடிந்தது மிலரே" (தொல். களவு. 20, ந.மேற். "தொடிநிலை".)

    தலைவன் குன்று மறையத் தலைவி வருந்துதல்: "அவர் நாட்டு,மணிநிற மால்வரை மறைதொறிவள், அறைமலர் நெடுங்க ணார்ந்தன பனியே" (ஐங். 208:3-5.)

(240)
  
(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "யான்ஆற்றுவதற்கு எண்ணியும் என் கண்கள் தாமே அழுதன; என் அவசநிலைக்கு யாது செய்வேன்!" என்று தலைவி கூறியது.)
 241.   
யாமே காமந் தாங்கவுந் தாந்தம் 
    
கெழுதகை மையி னழுதன தோழி 
    
கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் 
    
மன்ற வேங்கை மலர்பத நோக்கி 
5
ஏறா திட்ட வேமப் பூசல் 
    
விண்டோய் விடரகத் தியம்பும் 
    
குன்ற நாடற் கண்டவெங் கண்ணே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கபிலர்.

    (பி-ம்.) 1. ‘யாமெங்’, ‘தாங்கலம்’; 2. ‘கெழுதகைமையினாள்’;4. ‘மலர்ப்பதம்’; 7. ‘கண்டவென்’.

    (ப-ரை.) தோழி-, யாமே காமம் தாங்கவும் - நாம் காம நோயைப் பொறுத்து ஆற்றி இருப்பவும், கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் - கன்றுகளை வழியிலே செலுத்திய புல்லியதலையை உடைய சிறுவர்கள், மன்றம் வேங்கை மலர் பதம் நோக்கி - மன்றத்தின்கண் உள்ள வேங்கை மரம் மலரும் செவ்வியைப் பார்த்து, ஏறாது இட்டஏமம் பூசல் - அம் மரத்தின் மேல் ஏறாமல் செய்த இன்பத்தைத் தரும் ஆரவாரம், விண்தோய் விடர் அகத்து இயம்பும் - வானத்தை அளாவிய மலை முழையின்கண் எதிரொலி உண்டாக்கும், குன்றம் நாடன் - குன்றங்களை உடைய