கண்ணன். (பி-ம்,.) 2. ‘கதவு’; 3. ‘கேட்டனெம்’.
(ப-ரை.) பெரும - தலைவ, பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து - ஊரில் உள்ளார் பலரும் துயிலும் இருள் செறிந்த இடையிரவின் கண், உரவு களிறு போல் வந்து - வலியைஉடைய களிற்றைப் போல வந்து, இரவு கதவம் முயறல் - இராக் காலத்தே தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியை, கேளேம் அல்லேம் - யாம் கேளேம் அல்லேம்; கேட்டனம் - கேட்டேம்; ஓரி முருங்க - தலைக்கொண்டை சிதைய, பீலி சாய - தோகை மெலிய, நல் மயில்வலை பட்டாங்கு - நல்ல மயில் வலையின் கண்ணே அகப் பட்டாற் போல, யாம் உயங்கு தொறும் - யாம் வருந்துந் தோறும், அறன் இல் யாய் - மறமிக்கதாய், முயங்கும் - எம்மைத் தழுவுவாள்; அதனால் நின் குறிப்பறிந்து நின்பால் வர இயலவில்லை.
(முடிபு) பெரும, கதவம் முயறல் கேளேம் அல்லேம்; கேட்டனம்;யாய் முயங்கும்.
(கருத்து) காவல் மிகுதியால் நின்னைத் தலைவி காண்டல் அரிதாதலின் வரைந்து கோடலே நலம்.