பக்கம் எண் :


455


(சீவக.279); "சுற்றிலும் வேலியிட்ட தவர்களிட்ட வில்லும் வாளும் வேலுமே" (திருவரங்கக் .53.)

    3-4. தாழைவேலி: "கண்டல் வேலி" (நற். 191:5, 207:1.)

    5. மெல்லம் புலம்பன்: குறுந். 5:4, ஒப்பு.

    தலைவனது கொடுமை: குறுந். 9:7, ஒப்பு; கலி. 77:14.

(245)
  
(இரவுக் குறி வந்த தலைவன் சிறைப்புறத்தில் இருப்ப, தலைவி தோழியை நோக்கிக் கூறுவாளாய், "நேற்று இரவில் ஒரு தேர் ஈண்டுப் போந்து சென்றது என்று சிலர் சொல்ல, அது முதல் தாய் என்னை வருத்துகின்றாள்" எனக் காவன் மிகுதியை உணர்த்தி வரைவு கடாவச் செய்தது.)
 246.   
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை 
    
களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப் 
    
பனிக்கழி துழவும் பானாட் டனித்தோர் 
    
தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண் 
5
டோரு மலைக்கு மன்னை பிறரும் 
    
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர் 
    
இளையரு மடவரு முளரே 
    
அலையாத் தாயரொடு நற்பா லோரே. 

என்பது சிறைப்புறம்.

கபிலர்.

    (பி-ம்.) 1. ‘றிரையது’; 2. ‘மயக்கிய’; 3. ‘கழித்துழவும்’, ‘பானாணீத்தோர்’;4. ‘பெயருமென்ப’; 5. ‘மன்ன’; 8. ‘கற்பாலோரே’.

    (ப-ரை.) தோழி -, பெரு கடல் கரையது - பெரிய கடற்கரையின்கண் உள்ளதாகிய, சிறு வெள் காக்கை - சிறிய வெண்மையை உடைய காக்கை, களிறு செவி அன்ன - களிற்றினது காதைப் போன்ற, பசு அடை மயக்கி - பசிய இலையைக் கலக்கி, பனி கழி - குளிர்ச்சியை உடைய கழி நீரை, துழவும் - இரையின் பொருட்டுத் துழாவுகின்ற, பால் நாள் - பாதி இரவில், தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்ததுஎன்ப - தனியாக ஒருதேர் இங்கே வந்து மீண்டு சென்றதென்று அயலார் கூறுவர்; அதற்கொண்டு - அது தொடங்கி, அன்னை - தாய், அலைக்கும் - என்னைத் துன்புறுத்துகின்றாள்; பின்னு விடு கதுப்பின்- பின்னல் நாலவிடப்பட்ட கூந்தலை உடைய, மின் இழை மகளிர் - மின்னுகின்ற ஆபரணத்தை அணிந்த மகளிருள், இளையரும் மடவரும் -