தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- பல்லவ மன்னர்கள்

  • பாடம் - 2

    A03122 பல்லவ மன்னர்கள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர்ப் பல்லவ மன்னர்கள் தமது ஆட்சியை நிலை நாட்டினர் என்பதைச் சொல்கிறது. பல்லவர்கள் யார் என்பது பற்றிய பல்வேறு கருத்துகளை எடுத்துச் சொல்கிறது. பல்லவ மன்னர்களின் வரலாற்றையும், அவர்கள் தங்கள் ஆட்சி எல்லையை விரிவுபடுத்துவதற்காகப் பகைவர்களோடு செய்த போர்களையும் பற்றித் தெளிவாக விளக்கிச் சொல்கிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • இப்பாடத்தின் வாயிலாகப் பல்லவர்கள் யார் என்பது பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • பல்லவர்களைப் பற்றி நிறைய சான்றுகள் கிடைத்துள்ளதைத் தெரிந்து கொள்ளலாம். பல்லவர்கள் பட்டயங்களையும், கல்வெட்டுகளையும் நிறைய வடித்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • பல்லவ மன்னர்களை மூன்று பிரிவாகப் பிரித்து வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • பல்லவர்கள் யார்யாருடன் போர் செய்தனர் என்பது பற்றியும் புரிந்துகொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:28:42(இந்திய நேரம்)