இப்பாடத்தை நீங்கள் படித்து முடித்தால், கீழ்க்காணும் திறன்களைப் பெறுவீர்கள்.
இறைவனை வழிபடும் வழிபாட்டுப் பாடல்களின் பொருளைப் புரிந்து கொள்ளலாம்.
சிந்தனை வளமிக்க எளிய கருத்துகள் சாதாரணமானவர்களும் அறியும் வகையில் தத்துவம் பொதிந்த மந்திரப் பாக்களாகத் தரப்பட்டிருத்தலை அறியலாம்.