Primary tabs
-
பாடம் - 3
D02143 பாடாண் திணை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
அரசனது ஒழுகலாறுகளைச் சிறப்பித்துக் கூறும் முறையை எடுத்துக்காட்டும் பாடாண் படலம் பற்றியும் அதன் 47 துறைகள் பற்றியும் இப்பாடம் விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இதனைப் படித்து முடிக்கும்போது, நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளை அறிந்துகொள்வீர்கள்.
-
அரசனிடம் பரிசில் பெற வருவோர், போற்றும் முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
-
பொதுவாக அரசனை எவ்வெவ் வகைகளில் வாழ்த்துவார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
-
அரசனுக்கு நல்லனவற்றை அறிவுறுத்துதல் குறித்து அறிந்துகொள்ளலாம்.
-
தெய்வ வணக்கம் குறித்து அறிந்துகொள்ளலாம்.
-
கைக்கிளை முதலான அகச்செய்திகள் பாடாண் திணைக்கண் புறச் செய்தியாக ஆன நிலையையும் அவற்றின் விளக்கங்களையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
-
அரசன் பாராட்டுகின்ற முறை குறித்தும் பாராட்டுக்குரிய களங்கள் குறித்தும் அதற்கான மரபுகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.
-
அரசனது ஆளுமைத் திறங்களைப் பற்றிய தெளிவைப் பெறலாம்.
-