தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெய்தல் திணைப் பாடல்கள்

  • பாடம் - 4

    P10444 நெய்தல் திணைப் பாடல்கள் - அறிமுகம்
    E
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள நெய்தல் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது. நெய்தல் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பாடம் விவரிக்கிறது. நெய்தல் நில மக்களுக்கு உரிய வாழ்க்கை ஒழுக்கங்கள் முதலிய சிறப்புகளை இப்பாடம் விளக்குகிறது. கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை முதலியவை நெய்தல் திணைப் பாடல்களில் அமைந்துள்ள முறையினையும் இப்பாடம் விளக்குகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
    பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

    •  
    நெய்தல் திணைக்கு உரிய முப்பொருள்களை அறியலாம்.
    •  

    நெய்தல் திணையில் முப்பொருள் வெளிப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம் உணரலாம்.

    •  

    நெய்தல் திணை மக்களின் செயல்களான சிற்றில் கட்டி விளையாடல், கூடல் இழைத்தல், மீன் உணக்கல், மீன் கறி ஆக்கல், இயற்கையை உறவாக நினைத்தல் ஆகியவற்றை அறியலாம்.

    •  

    நெய்தல் பாடல்களின் இலக்கிய நயங்களாகக் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை நயங்கள் பற்றி அறியலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:20:41(இந்திய நேரம்)