Primary tabs
-
பாடம் - 2
P20222 திவ்வியப்பிரபந்தம் - ஓர் அறிமுகம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?ஆழ்வார்கள் அருளிச் செய்த பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. பன்னிரு ஆழ்வார்களும் இப்பாடத்தில் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள்.
வைணவப் பாசுரங்கள் அனைத்தும் 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன என்பதும் அவை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்ற பெயரால் வழங்கப்பட்டன என்பதும் குறிக்கப் படுகின்றன.
இப்பாடத்தில் மணிப்பிரவாள நடையில் வைணவர்கள் எழுதிய உரைகள் தமிழுக்கு வளம் சேர்த்ததும் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?-
திவ்வியப் பிரபந்தம் அருளிய ஆழ்வார்களையும், அவர்களின் அருளிச் செயல்களையும் அறிந்து கொள்ளலாம்.
-
திவ்வியப் பிரபந்தத்தின் விவரங்களைத் தொகுத்துக் கொள்ளலாம்.
-
திவ்வியப் பிரபந்தத்தினை நாலாயிரம் ஆகக் கணக்கிடுவதில் அறிஞர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டையும் வைப்பு முறையையும் அடையாளம் காணலாம்.
-
திவ்வியப் பிரபந்த உரையாசிரியர், ஆழ்வார்கள் அருளிய திவ்ய தேசங்கள், மாதிரிக்காக வைணவம் தொடர்பான சில சொற்கள் உணர்த்தும் பொருள்கள் என்பன போன்ற சில செய்திகளைப் பட்டியலிடலாம்.
-