Primary tabs
-
பாடம் - 2இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
யாப்பறிந்து பா இயற்றும் முறைகளை எடுத்துரைக்கின்றது. இசைப்பாக்களின் அமைப்பு முறைகளைக் குறிப்பிடுகின்றது. புதுக்கவிதை புனையும் முறைகளை விளக்குகின்றது. துளிப்பா வகைகள் குறித்து விவரிக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?மரபுக் கவிதைகளை இயற்றும் திறன் பெறலாம்.
இசைப் பாக்களை அடையாளம் காணும் ஆற்றல் பெறலாம்.
புதுக்கவிதைகளின் பொருண்மைகளை உணர்ந்து சுவைக்கலாம்.
துளிப்பாக்களில் நயம்படக் கவிதை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.