Primary tabs
- பாடம் - 6
P10226 கோவி. மணிசேகரனின் உரைநடைஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?இந்தப் பாடம் கோவி.மணிசேகரனின் படைப்புகளையும் அவற்றின் உள்ளடக்கத்தையும் பற்றிக் கூறுகிறது. அவரது உரைநடைக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கியவரைத் தெரிவிக்கிறது. அவரது உரைநடையின் வகைகளை விளக்குகிறது. அவரது உரைநடையில் அமைந்திருக்கும் இலக்கியக் கூறுகளை எடுத்துக் கூறுகிறது. அவரது உரைநடையின் தனித்தன்மைகளை வெளிப்படுத்துகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?- கோவி.மணிசேகரனின் படைப்புகளையும் அவற்றின் உள்ளடக்கத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
- இப்பாடத்தில் அவரது உரைநடைக்கு ஊற்றுக்கண் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
- கோவி.மணிசேகரனின் உரைநடை வகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- அவரது உரைநடையில் அமைந்திருக்கும் இலக்கியக் கூறுகளை அறிந்து கொள்ளலாம்.
- அவரது உரைநடையின் தனித்தன்மைகளை உணர்ந்து கொள்ளலாம்.