தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 5.0 பாடமுன்னுரை

    தமிழ் இலக்கிய வகைகளுள் சதக இலக்கியமும் ஒன்றாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் சதக இலக்கியம் இடைக்காலத்து வரவு. பல்லவர் காலத்திற்கு முன்பு சதக இலக்கியம் பற்றிய குறிப்புகளைத் தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை. முதன் முதலாக மாணிக்கவாசகர் காலத்தில்தான் 'சதகம்' என்ற சொல்லைத் தமிழ்ச் சூழலில் அறிய முடிகின்றது. மாணிக்கவாசகர் திருச்சதகம் என்ற பெயரில் நூறு பாடல்களைத் திருவாசகத்தில் இயற்றி உள்ளார். சதகம் என்ற பெயரில் தனியொரு சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்ற காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு எனலாம்.

    நண்பர்களே! இப்பாடத்தின் மூலம் சதக இலக்கியம் பற்றிய செய்திகளை நாம் அறிய இருக்கிறோம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 12:17:08(இந்திய நேரம்)