Primary tabs
- பாடம் - 2இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
பண்டைய தமிழ் அரசர், இளவரசர்களை எவ்வாறு நியமனம் செய்தனர் என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அரசியர், பட்டத்து அரசியர், அரசு அலுவலர்கள் பற்றிக் கூறுகின்றது. நாட்டுப் பிரிவுகள், ஊராட்சி முறை, வரிகள் ஆகியவை பற்றியும் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?-
பழந்தமிழ் அரசர்கள் இளவரசர்களை நியமித்து எவ்வாறு பயிற்சி அளித்தனர் என்பதனை அறிந்து கொள்ளலாம்.
பெண்களும் ஆளும் உரிமையும், அதிகாரம் செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தேர்தல் முறை மிக நியாயமான முறையில் நடைபெற்றது. நல்லவர்கள் உள்ளாட்சிப் பதவி பெற்றனர் என்பதன் வாயிலாகப் பண்டைய நல்லரசர்களின் நல்லாட்சி முறை எவ்வாறு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
-