Primary tabs
- பாடம் - 3இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தமிழகக் கலைகள், கலைவல்லவர்கள், அவர்கள் அரசரால் பெற்ற சிறப்புகள், பல்வேறு (கலை) இசைக் கருவிகள், இசை-கலை பற்றிய கல்வெட்டுகள் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும், தேவரடியார்கள், அரசர்களின் பொதுப்பணி ஆகியவை பற்றியும் கூறுகின்றது.
தமிழின் சிறப்பு, சங்க இலக்கியச் செய்திகள், புலவர்கள், இலக்கண உரையாசிரியர்கள் பற்றிய செய்திகள் ஆகியவை பற்றியும் சொல்லுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?கலை, கலைஞர் பெருமைகளையும், அரசர்கள் அவர்களுக்கு அளித்த சிறப்புகளையும், அரசர்களே சிறந்த கலைவாணர்களாக இருந்த செய்தியையும் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்மொழியின் சிறப்பையும், இலக்கிய இலக்கண உரைச் சிறப்புகளையும் அறியும் பயனைப் பெறுகிறோம்.