தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமயமும் வழிபாடும்

  • பாடம் - 4
    C03144  சமயமும் வழிபாடும்
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பழங்கால மக்களிடம் சமய நம்பிக்கையும், கடவுள் வழிபாடும் எவ்வாறு இருந்த என்பதைக் கூறுகிறது. சமய நிறுவனங்களாக விளங்கியவை கோயில்கள் என்பதைச் சொல்லி, கோயில்களின் வளர்ச்சியையும் குறிப்பிடுகிறது. பல்லவ, பாண்டிய, சோழ மரபைச் சார்ந்த மன்னர்கள் கோயில் பணிசெய்ததையும் சமய வளர்ச்சிக்காக மடங்கள் நிறுவியதையும் சுட்டிக் காட்டுகிறது. சமண, பௌத்த, சைவ மடங்கள் இருந்ததைக் கூறுகிறது. கோயில் வழியாகச் சமயப் பணியும், சமுதாயப் பணியும் நடைபெற்றதை உணர்த்துகிறது. கோயிலை இறைவனாகக் கருதி வழிபட்ட வழக்கத்தைக் குறிப்பிடுகிறது. கோயிலுக்கு விளக்கேற்ற கொடை அளிக்கப்பட்ட செய்தியும் இடம்பெறுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • இந்தப் பாடத்தைப் படிப்பதால் உயிர் வளத்திற்குச் சமய நம்பிக்கையும் வழிபாடும் தேவை என்பதை உணரமுடியும்.

    • பழங்காலத்திலேயே தமிழகத்தில் கோயில்கள் இருந்ததையும் மக்கள் வழிபட்டதையும் அறிந்து கொள்ளலாம்.

    • பல்லவ பாண்டிய சோழ மன்னர்கள் கோயில் திருப்பணி செய்ததோடு சமயப்பணியும், சமுதாயப் பணியும் செய்ததை அறிய முடியும்.

    • கோயில்களில் விளக்கேற்றலின் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

    • கோயில்கள் மட்டுமன்றி நந்தவனம் அமைத்ததையும் தெரிந்து கொள்ளலாம்.

    பாடஅமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:08:44(இந்திய நேரம்)